Thursday 6 June 2013

"செம்மொழி” எக்ஸ்பிரஸ், 11ம் தேதி துவக்கம்

மன்னார்குடி- கோவை இடையே, "செம்மொழி” எக்ஸ்பிரஸ் ரயில் வரும், 11ம் தேதி முதல், இயக்கப்படுகிறது.

மன்னார்குடி-கோவை இடையே, தினசரி ரயில் இயக்கப்படும். கோவையிலிருந்து இந்த ரயில், 12ம்தேதியிலிருந்து இயக்கப்படுகிறது. இந்த ரயில், மன்னார்குடியில், இரவு, 8:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 5:00 மணிக்கு கோவை சென்றடையும். கோவையிலிருந்து இரவு,11:55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை,7:55 மணிக்கு மன்னார்குடி சென்றடையும். இந்த ரயிலில், ஒரு "ஏசி'முதல் வகுப்பு மற்றும் "ஏசி' இரண்டடுக்கு இணைப்பு பெட்டியும், ஆறு, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும், ஆறு, இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளும், இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

இன்று (6ம் தேதி) முதல் முன்பதிவு ஆரம்பம்.
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif


No comments:

Post a Comment