Thursday 13 June 2013

பிளஸ்1 வகுப்புகள் 24ல் துவக்கம்

கோவை வருவாய் மாவட்டத்தில் பிளஸ்1 வகுப்புகள் வரும் 24ம் தேதி துவங்கும்.


கடந்த மே 31ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பிளஸ்1 வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. 
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 95 சதவீதம் முடிந்துள்ள நிலையில். சில தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகள் முன்பே துவங்கி வகுப்புகள் நடந்து வருகின்றன.அரசு பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் களுக்கு வரும் ஜூன் 20ம் தேதி மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அந்தந்த பள்ளிகளின் வாயிலாக வழங்கப்பட்டு,வேலை வாய்ப்புக்கு, "ஆன்-லைன்' முறையில் பதிவு செய்யப்பட உள்ளது. தனித்தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment