Thursday 28 March 2013

BNI - இப்போது கோவையிலும்...


கோவை பஜார் - வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி


EDUCATION & LIFE STYLE EXPO 2013


குழந்தைகளுக்கான சமையல் பயிற்சி


இண்டலி ஜென்ஸ் கம்ப்யூட்டிங் - தேசிய கருத்தரங்கம்


மலையாளம் கற்றுக்கொள்ள!

The Coimbatore Malayali Samajam and Kerala Association for Non-formal Education and Development will conduct a seven-month certificate course in Malayalam from June.

For details dial 2524977 or 94864-77891.

கோவையில் மாதா அமிர்தானந்தமயி

ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மாதா அமிர்தானந்தமயி கோவைக்கு விஜயம் செய்கிறார். நல்லாம்பாளையத்திலுள்ள பிரம்மஸ்தான ஆலய மகோத்சவம் நிகழ்வில் கலந்துகொள்கிறார். 

சத்சங், பஜன், தியானம், அருளுரை, ராகு தோஷ பரிகார பூஜை, சனி தோஷ பரிகார பூஜை ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டான்செட் தேர்வு - கோவையில் 14 மையங்கள்

TANCET (தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு) வருகிற ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. கோவையில் ஜிசிடி, சிஐடி, ஜிஆர்டி, பிஎஸ்ஜி உள்ளிட்ட 14 மையங்களில் நடைபெற இருக்கிறது.

Wednesday 27 March 2013

Exercising Leadership in Schools



XSEED organizing 'Exercising Leadership in Schools' an intensive 3 hours workshop on creating a culture of learning in schools for correspondents, principals and trustees.

Date: 02-04-2013

Venue: Hotel Residency

Contact: 9994299222

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா


கோவை சன்மார்க்க சங்கமும், ஜி.ஐ.ஏ.எல் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் ‘சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா’ வரும் மார்ச் 30-ம் தேதி தேவாங்க மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருக்கிறது.

‘சத்ய சாய்பாபாவும், சுவாமி விவேகானந்தரும்’ என்கிற தலைப்பில் சென்னை சாய் சுந்தரகுமாரும், ‘பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரும், சுவாமி விவேகானந்தரும்’ என்கிற தலைப்பில் விஸ்வநாதனும் சிறப்புரையாற்றுகிறார்கள். மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமை வகிக்கிறார்.

TEDx Coimbatore - Devote - Speakers List!


CORPORATE GOVERNANCE NORMS IN INDIA



இந்திய தொழில் வர்த்தக சபை ஒருங்கிணைக்கும் சந்திப்பு 'CORPORATE GOVERNANCE NORMS IN INDIA AS PER COMPANIES BILL,2012'

Security and Exchange Board of India-ன் நிர்வாக இயக்குனர் திரு.ஆர்.கே. பத்மநாபன் ஐபிஎஸ் சிறப்புரையாற்றுகிறார்.

இடம்: சேம்பர் டவர்ஸ், அவிநாசி சாலை

நாள்: 28-03-2013

நேரம்: மாலை 5:00 மணி

Sunday 24 March 2013

TRAFFIC POLICE WARDENS


Tamil Nadu Police Traffic Wardens Organisation, Coimbatore Unit, has invited applications from socially conscious persons in the age group of 25 to 45 to become members of the Traffic Police Wardens Organisation.

Non-profit organisation

In a release, the organisation said that Tamil Nadu Police Traffic Wardens Organisation is a government run, non-profit and purely voluntary organisation, where socially conscious public can serve for the cause of road safety in police uniform.

Contact

Those interested can call the duty planning officers at 93446-89143 or 98422-33183 or PRO at 77080-09300 or could send an e-mail tochief@trafficwardens.in

http://www.trafficwardens.in/you_to_can_become_a_traffic_warden.html

ருது வைபவ்

எஸ்.எஸ்.வி.எம் பள்ளியின் 13ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் ’ருது வைபவ்’ வரும் மார்ச் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஐஐஎம் (இந்தூர்) டைரக்டர் டாக்டர். என். ரவிச்சந்திரன் கலந்துகொள்கிறார்.

இலவச சமஷ்டி உபநயனம்


ராம் நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று  இலவச சமஷ்டி உபநயனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு: 0422 - 2236059

வழிகாட்டி - மார்ச் 27ல் துவக்கம்


பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியற்கு எதிர்கால கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான நிகழ்ச்சி ‘வழிகாட்டி’ வரும் மார்ச் 27ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை கோவை ஆவாராம்பாளையத்திலுள்ள ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

Friday 22 March 2013

ராஜா - பாரதி பாஸ்கர் பட்டிமன்றம்!



இடம்: சரோஜினி நட்ராஜ் ஆடிட்டோரியம்

நேரம்: மாலை 6:30 மணி

தொடர்புக்கு: 98940 92314

அனுமதி இலவசம்!

குறு - சிறு தொழில்கள் - நிதியுதவி வாய்ப்புகள்



இந்திய தொழில் வர்த்தக சபை கோயம்புத்தூர் மற்றும் இந்திய தொழில் வர்த்தக சபைகள் சம்மேளனம் புதுடெல்லி இணைந்து இன்று (மார்ச் 23) ‘குறு மற்றும் சிறு தொழில்களின் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப நிதியுதவி வாய்ப்புகள்’ சிறப்பு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஊரக தொழில்துறை அமைச்சர் திரு. பி. மோகன், மாநகராட்சி மேயர் திரு. செ.ம.வேலுச்சாமி மற்றும் தொழில்கள் துறை செயலர் திரு. கி. தனவேல் ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.

இடம்: சேம்பர் டவர்ஸ்

நேரம்: மாலை 3:30 மணி

தொடர்புக்கு: 2224000

அருட்பா அமுதம் - நூல் அறிமுக விழா


பி.எஸ்.நாராயணசுவாமியின் "அருட்பா அமுதம்' நூல் அறிமுக விழா மற்றும் திருவருட்பா இசை நிகழ்ச்சி. பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், ஆர்.நட்ராஜ், "கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' கிருஷ்ணன்; பரத் சுந்தரின் திருவருட்பா இசை நிகழ்ச்சி; கிக்கானி மேல்நிலைப் பள்ளி, புரூக் ஃபீல்டு ரோடு, வடகோவை அருகே, கோயம்புத்தூர்; 24.3.13 மாலை 6.30.

கோவை இலக்கியச் சந்திப்பு


Jewel of Carmel - 2013

இன்று (மார்ச்-23) மதியம் 2:30 மணிக்கு கார்மல் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கும் ‘ Jewel of Carmel - 2013' விருது வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு. எம். கருணாகரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் கலந்துகொள்கிறார். தங்களது துறைகளில் சிறந்து விளங்கும் கார்மல் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 15 பேர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. 

'Beasts of the Southern Wild'


Konangal film society screens 'Beasts of the Southern Wild' 
A film by Benh Zeitlin (2012/USA/Col/Runtime 93 mins)

24th March 2013; 5.45pm

Perks Mini Theater

http://konangalfilmsociety.blogspot.in/

Adoption caomp for mongrel puppies and kittens!


Humane Animal Society (HAS) and People for Animals (PFA) - Unit I will organise an adoption camp for mongrel (Indian country dog) puppies and kittens on March 24th.

Venue: Ram Apartments, Laxmi mills junction, near vasan eye care.

Wednesday 20 March 2013

Solar Energy Investment and Technology Forum


Renewable Energy India (REI) is planning to host Solar Energy Investment and Technology Forum on April 9 at The Residency in Coimbatore.
The forum would explore the use of solar energy to bridge the energy supply gap. It would also focus on clarification of policy norms, a REI release said.
The forum would help large-scale units in and around this region understand solar power obligation under Tamil Nadu Solar Energy Policy 2012, and discuss cost-effective techniques for implementing solar energy systems to tackle basic power requirements.

Kajal Agarwal will open Atlas Jewellary



ATLAS Jewellery is set to open  golden doors in Cross-cut Road, Gandhipuram, Coimbatore on Saturday, March 23rd, 2013 at 09.30 AM as part of our expansion plan in India. The showroom will be the third in India and first in Tamilnadu. We plan to leave our own humble landmark in Coimbatore – the industrial, commercial and textile hub of South India, by opening this state of the art outlet.

Eminent personalities from the socio-cultural and political sector - Thiru P.R. Natarajan, Hon MP of Coimbatore, Thiru Doraiswamy R. (A) Challenger Dorai, Hon MLA of Coimbatore South, Thiru T. Malaravan Hon MLA of Coimbatore North, Thiru S.M. Velusamy, Hon Mayor of Coimbatore, Thiru S.J. Ashok Kumar, Ward 5 Councillor of Coimbatore City Municipal Corporation and Ms. Kajal Agarwal, Famous Cine Artist will attend the event.


Sunday 17 March 2013

PROVERBS OF KONGU REGION


The 11th lecture of the Vanavarayar Foundation would be on March 21 on the topic ‘Proverbs of Kongu Region.’

According to a press note issued here, the lecture would be delivered by S. Durai at Purandaradasar Hall in R.S.Puram at 6 p.m.

The Foundation said that the objective of this lecture series was to bring awareness and exposure to the region.

Workshop on wind power!


The Department of Electrical and Electronics Engineering of Karunya University will organise a national workshop on “The Future of Wind Power: Innovations and Research Challenges” on March 22 and 23.

Objective

The objective of the workshop is to review the state-of-the-art technologies in wind power and inform the participants on the opportunities that will be available in the wind industry.

K. Kasthoorirangaian, chairman of Indian Wind Power Association, and vice-president of World Wind Energy Association, Bonn, Germany, will inaugurate the workshop, and speak on “Challenges and Innovations in On-Shore and Off-Shore Wind Farms”.

S. Gomathinayagam, executive director, Centre for Wind Energy Technology, an autonomous research and development institution under the Ministry of New and Renewable Energy, Government of India, will also speak in the workshop.

For details, visit www.karunya.edu/eee/Upcoming Events.html or call 98945-24588.

அம்மா திட்டம் கோவையில் 19-ம் தேதி துவக்கம்

கோவை மாவட்டத்தில் அம்மா திட்டத்தில் வருகிற 19-ந் தேதி அனைத்து வட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொள்ளும் கிராமங்கள் கீழ்கண்டவாறு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கோவை தெற்கு வட்டத்தில் நரசீபுரம் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் அம்மா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதேபோல் கோவை வடக்கு மாவட்டத்தில் நெ.24.வீரபாண்டியில் நடைபெறும் விழாவில் மாவட்ட வருவாய் அலுவலரும், கிணத்துக்கடவு வட்டம் காட்டம்பட்டியில் பொள்ளாச்சி சப்-கலெக்டரும், அன்னூர் வட்டத்தில் பிள்ளையப்பம் பாளையத்தில் நடைபெறும் விழாவில் வருவாய் கோட்டாட்சியரும், சூலூர் வட்டம் கம்மாளப்பட்டியில் நடைபெறும்.

விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரும், பொள்ளாச்சி சேத்துடையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும், வால்பாறையில் மாவட்ட வழங்கல் அலுவலரும், மேட்டுப்பாளையம் வட்டத்தில் தோலம்பாளையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைகள்) ஆகியோர் கலந்து கொண்டு அம்மா திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள்.

அம்மா திட்டத்தின் மூலம் வருவாய்த்துறை வட்டாட்சியர்கள் தலைமையிலான குழுவினர் அக்கிராம மக்களின் பொதுவான குறைகளை தெரிவிக்கும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து கோரிக்கையினை பொறுத்து அந்த இடத்திலேயே நிறைவேற்றவும், முடிவு செய்யப்படாத விண்ணப்பங்களின் பேரில் சம்பந்தப்பட்ட துறை மூலமாக நிவாரணம் பெறவும் தமிழக முதலமைச்சரின் அம்மா திட்டத்தின் மூலம் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதால் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்களால் தொடங்கி வைக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் அனைவரும் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

காந்தி சில்ப் பஜார்


மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகமும், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகமும் இணைந்து நடத்தும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி ‘காந்தி சில்ப் பஜார்’ வரும் மார்ச் 25-ம் தேதி வரை பார்க் கேட் மைதானத்தில் நடைபெறுகிறது.

விடியல் 2013 - கல்வி கண்காட்சி



தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் கூட்டமைப்பு வழங்கும் ‘விடியல் 2013’ கல்வி கண்காட்சி வரும் மார்ச் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இடம்: விக்னேஷ் மஹால், சுங்கம்

தொடர்புக்கு: 93631 19147

Saturday 16 March 2013

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு


கோவை மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு’

CREATIVE HUNT


சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம்


Free cochlear implants for children



A free camp to screen for hearing disabilities among children from below poverty line families will be conducted every month on the third Sunday in a city hospital under the Chief Minister’s Comprehensive Insurance Scheme. Patients under six years of age and hard of hearing since birth, could use this opportunity to avail cochlear implant surgery free of cost.

A cochlear implant is a surgically implanted electronic device that provides a sense of sound to a person who is profoundly deaf or severely hard of hearing.

According to a press note, Vikram ENT Hospital and Research Institute is the only ENT hospital recognised for cochlear implants under the health insurance scheme in Coimbatore region. The camp for the month of March will be held on Sunday (March 17) at Vikram ENT Hospital & Research Institute, 69, West Venkatasamy Road, RS Puram. Further details about the camp could be obtained by contacting the following mobile numbers: 94861 29157 / 98422 71519.

கோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்



இடம்: டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
நாள்: 19.03.2013 நேரம் காலை 10.00 மணி

தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில்  மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி அவர்கள் வரவேற்புரையாற்றுகின்றார். திரைக்கலைஞர் இரா.சிவக்குமார், திரு. என்.இராம், திரு. ஆர். நாகராஜ், திரு. ந.சுப்ரமணியம், திரு.மு.வேலாயுதம், பேராசிரியர் கா.செல்லப்பன், எழுத்தாளர் மாலன், பேராசிரியர் சிற்பி, முனைவர் பெ,இரா,முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

Thursday 14 March 2013

Quiz Time



The Coimbatore Quiz circle meets for a round of beginners' / school quiz. This will be followed by main quiz.

Venue: PSG Institute of Management

Date: March 17

Time: 3:30 PM

Contact: 97897 20463

NIT - Trichy incubation orientation event at Coimbatore!


கோவையில் உன்னதி!



ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்வில் ஏற்றம் பெற உதவிய பெங்களூருவினைச் சேர்ந்த சமூக சேவை அமைப்பு உன்னதி, கோவையில் தனது சேவைகளை இவ்வாரம் முதல் துவக்க இருக்கிறது.

தனி நபர்களை, சுய லாபங்களை முன்னிறுத்தாமல், சமூக மாற்றத்திற்காக அறவுணர்ச்சியுடன் பாடுபடும் தன்னலமற்ற அமைப்புகள் அருகி வரும் காலத்தில் உன்னதியின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

உன்னதி பற்றி மேலும் அறிந்து கொள்ள: http://www.unnatiblr.org

Wednesday 13 March 2013

Free Glaucoma Screening Camp


The Siloam Thomas Eye Hospital here is conducting a glaucoma screening camp free of cost from March 13 to 16 jointly with Lions Clubs International, District B324 B5 to mark the World Glaucoma Week.

Free Kidney Disease Screening Week


On the occasion of World Kidney Day, SPT Hospitals present, 'Free Kidney Disease Screening Week' (March 14 - March 20)

Venue: SPT Hospitals, Ramnagar

Time: 9:00 AM to 12:30 PM

Contact: 9677796711

விவேகானந்தரின் சூரிய நமஸ்காரம் யோகா பயிற்சி வகுப்பு



சுவாமி விவேகானந்தரின் 150-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை இணைந்து நடத்தும் ‘விவேகானந்தரின் சூரிய நமஸ்காரம் யோகா பயிற்சி வகுப்பு’ வரும் மார்ச்-17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணியளவில் கிக்கானி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

டாக்டர் திரு. பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையுரை ஆற்றுகிறார்.

அனுமதி இலவசம்!

வாருங்கள், போதையை வீழ்த்துவோம்! வரும் 17ல் கோவையில் சிறப்பு நிகழ்ச்சி



போதையில் வீழ்ந்தவர்களை மீட்பதற்கு உதவும் முக்கிய நிகழ்வு, கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் வரும் ஞாயிறன்று நடக்கவுள்ளது; குடியிலிருந்து மீள விரும்புவோரும், பிறரை மீட்க விரும்புவோரும் இதில் பங்கேற்று பயனடையலாம்.

தமிழகத்தில் குடிக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கீழ்த்தட்டு மக்களிடத்தில் வெகுவேகமாகப் பரவி வரும் "டாஸ்மாக்' கலாச்சாரம், பல குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்திக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவோரும், குடி உள்ளிட்ட போதை வஸ்துக்களை உட்கொண்ட நிலையிலேயே குற்றங்களைச் செய்திருப்பதும் பல வழக்குகளில் நிரூபணமாகியிருக்கிறது. பட்டப்பகலில் பள்ளிச் சீருடையில், மது மயக்கத்தில் தடுமாறும் மாணவர்களை அதிகம் பார்க்க முடிகிறது. மதுக்கடைகளை மூட வேண்டுமென்று, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும், காந்தியவாதிகளும் பல விதங்களில் போராடி வந்தாலும், இப்பிரச்னையை சமூகக்கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கு தமிழக அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது. வருவாய் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதால், குடிப்பவர்களின் எண்ணிக்கையும், குடிப்பதன் அளவும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. மது விற்பனையில் முதலிடத்தைப் பிடிக்கும் போட்டியில், உழைப்புக்கு பெயர் பெற்ற கோவை மாவட்டமும், முன்னணியில் இருப்பது வேதனைக்குரிய முரண்பாடு. இந்த மாவட்டத்தில், மாதத்துக்கு, மூன்றரை லட்சம் மது பாட்டில்களும், ஒன்றரை லட்சம் பீர் பாட்டில்களும் விற்பனையாகின்றன; மாதத்துக்கு 140 கோடி ரூபாய் வீதம், ஆண்டுக்கு 1,600 கோடி ரூபாய்க்கு கோவை "குடி'மகன்கள் குடித்துத் தீர்க்கின்றனர். இந்த தொகையில், எத்தனை பாலங்கள், எத்தனை சாலைகள் அமைக்கலாம் என்பது ஒரு புறமிருக்கட்டும்; எத்தனை குடும்பங்களுக்குப் போய்ச் சேர வேண்டிய தொகை இது?. திருமணத்துக்காக, கல்விக்காக, மூன்று வேளை உணவுக்காக வைத்திருந்த எத்தனை பணம், இந்த மது பாட்டில்களில் கரைந்தது என்பதை யாராலும் கணக்கிட முடியாது. குடிக்கு அடிமையாகி இறந்தவர்களையும், அதனால் நிலை குலைந்த குடும்பங்களையும் யாராலும் மதிப்பிடவும் முடியாது. போதையின் பாதையில் வெகுதூரம் சென்று விட்ட தமிழ்ச் சமுதாயத்தை மீட்க வேண்டிய அரசு, மவுனம் சாதிக்கிறது. அதனால், போதையில் வீழ்ந்து கிடக்கும் கணவரை, மகனை, நண்பனை மீட்க வேண்டிய பொறுப்பு, நம்மையே சார்ந்திருக்கிறது. கோவையில் அதற்கான இனிய துவக்கமாக ஞாயிறன்று நடக்கிறது நல்லதொரு நிகழ்வு. 

கோவை மக்களின் இதயங்களை இனிப்பால் வென்ற "ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' நிறுவனம், ஞாயிற்றுக்கிழமைகளில் "ஞாயிறுதோறும் சந்திப்போம்; நல்லதே சிந்திப்போம்' என்ற தலைப்பில், ஆன்மிகம், இசை, சமூகம் சார்ந்த பல்வேறு தலைப்புகளில், சொற்பொழிவு, இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வரிசையில், வரும் ஞாயிற்றுக்கிழமையை "போதைக்கு எதிரான ஞாயிறாக' மாற்றும் வகையில், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியில், "போதை-ஒரு விஞ்ஞான பார்வை' என்ற தலைப்பில் மனோதத்துவ நிபுணர் சீனிவாசனும், "போதை-மீள்வதும் மீட்பதும் நமது கடமை' என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் சிவசங்கரியும் உரை நிகழ்த்துகின்றனர். கோவை புரூக்பாண்ட் ரோட்டிலுள்ள கிக்கானி பள்ளியில், வரும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி துவங்குகிறது. 

போதையால் ஏற்படும் தீமைகளை, நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் விஷயத்தோடு விளக்கப்போகும் இந்நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்பது முக்கியம்; அதை விட, எப்போதும் "உற்சாகத்தில்' மிதப்போரையும் "தெளிவாய்' அழைத்து வருவதும் அவசியம்.

Tuesday 12 March 2013

Higher Education Engineering Opportunities at University of Hartford


PSG institute of advanced studies organizes Interactive meeting on ' Higher Education Engineering Opportunities at University of Hartford, USA'. Mr. Sam Skinner, Director of International Admissions - University of Hartford will address the gathering.


Venue: PSGII Conference Hall

Date: 15-03-2013

Time: 3:30 PM to 4:30 PM

Contact: 9842257623

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா!



பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பேரூர் கொங்குநாட்டு வைப்புத்தலங்களில் பிரசித்த பெற்ற சிவன் தலமாகும். இங்கு ஆண்டுதோறும், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடக்கிறது. விழா, வரும் 17ம் தேதி காலை 7.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு 8.00 மணிக்கு மலர்பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட்களுக்கு, காலை 9.00 மணிக்கு வேள்விபூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது.
18ம் தேதி இரவு சந்திரபிரபை, சூர்யபிரபை திருவீதி உலா, 19ம் தேதி இரவு பூதவாகனம், சிம்மவாகனம், 20ம் தேதி இரவு மலர்ரதம், காமதேனுவாகனம், 21ம் தேதி இரவு 9.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷபவாகன காட்சி, அறுபத்து மூன்று நாயன்மார்கள் காட்சியும், 22ம் தேதி இரவு 8.00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம், வெள்ளையானை சேவையும் நடக்கிறது.
வரும் 23ம் தேதி மாலை 3.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 24ம் தேதி இரவு 8.00 மணிக்கு வேடுபரி உற்வசம், குதிரைவாகனம், கிளிவாகனம் திருவீதி உலா நடத்தப்பட்டு, வரும் 25ம் தேதி இரவு 8.00 மணிக்கு, இந்திர விமான தெப்பத்திருவிழா நடக்கிறது. வரும் 26ம் தேதி, அதிகாலை 3.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள், ஸ்ரீநடராஜபெருமான் திருமஞ்சனம், தரிசனக்காட்சி, மகாதீபாராதனை, திருவீதி உலா நடக்கிறது. மார்ச் 26ம் தேதி கொடியிறக்குதலுடன் விழா முடிகிறது.
விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Monday 11 March 2013

VW Polo R Cup Driver Selection


அலங்கார செடிகள் கண்காட்சி



Flower Garden வழங்கும் ‘Interior Expo-2013' அலங்கார செடிகள், அலங்கார நீர்வீழ்ச்சிகள் கண்காட்சி.

இடம்: ஜெயம் ஹால், ரேஸ் கோர்ஸ்

நாள்: மார்ச் 15 முதல் மார்ச் 18 வரை

தொடர்புக்கு: 8220046366

Sunday 10 March 2013

சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் ஆண்டு விழா



கோவை, சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, இன்று (மார்ச்-11 திங்கள்கிழமை) முதல் 18-ம் தேதி வரை ஆண்டு விழா நடைபெற உள்ளது. கொடியேற்று விழாவில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் என்.நடராஜன் பங்கேற்கிறார்.
  12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோவிலில் காட்சி வேலியும் பறையெடுப்பும் நடைபெற உள்ளது. கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. தா.மலரவன், வடக்கு மண்டலத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
  13-ஆண் தேதி கோவிலில் சிறப்பு பூஜைகளும் ஐயப்பனுக்கு களபாபிஷேகம் நடைபெற உள்ளது. 14-ஆம் தேதி சிறப்பு பூஜைகள், குச்சுப்புடி, மோகினியாட்டம், பரதநாட்டியம் ஆகியவை நடைபெற உள்ளன. கோவை மேயர் செ.ம. வேலுசாமி, கிழக்கு மண்டலத் தலைவர் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
  15-ஆம் சிறப்புப் பூஜைகளும் பரதநாட்டியமும் நடைபெற உள்ளன. 16-ஆம் தேதி நடைபெறும் உற்சவ பலி நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் செ.தாமோதரன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
   17-ஆம் தேதி பள்ளி வேட்டையில் ஐயப்பசுவாமி யானை மேல் அமர்ந்து பள்ளிவேட்டைக்கு எழுந்தருளுவார். 18-ஆம் திங்கள்கிழமை 5 யானைகளுடன் ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் ஐயப்ப சுவாமி கோவிலில் நிறைபறை வைக்கப்பட உள்ளது.

Saturday 9 March 2013

Sindh - Stories from vanished Homeland




சாஸ் அகர்வால் எழுதிய 'Sindh - Stories from vanished Homeland' எனும் நூல் அறிமுக விழா கோவை காஸ்மோ பாலிடன் கிளப்பில் வரும் மார்ச்-13-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை.

http://www.thehindu.com/arts/books/article3369884.ece

Friday 8 March 2013

ராம்நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி ஆலய சிவராத்திரி விழா!



கோவை ராம்நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி ஆலயத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் கைகளாலே சிவனுக்கு அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளாக கர்நாடக சங்கீத கச்சேரி, சிவநாம சங்கீர்த்தனம் மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை எஸ். சின்னப்பொண்ணுவின் கிராமிய நிகழ்ச்சி!


தஞ்சை எஸ். சின்னப்பொண்ணு குழுவினரின் நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சி ஆலாந்துறை ஓம் ஸ்ரீ நாகசக்தி அம்மன் திருக்கோவில் மஹா சிவராத்திரி விழாவில் நடைபெற இருக்கிறது. மார்ச் 10-ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு.

தொடர்புக்கு: 96291 52185