Thursday 27 June 2013

பள்ளி மாணவர்கள் பஸ் பாஸ் விண்ணப்பிக்க இன்று கெடு முடிகிறது



கோவை வருவாய் மாவட்டத்தில், 2.5 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டியுள்ளது. நேற்று மாலை வரை 625 பள்ளிகளை சேர்ந்த, 95 ஆயிரத்து 918 மாணவர்களின் விண்ணப்பங்கள் , போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதில், 24 ஆயிரத்து 192 பேருக்கு பஸ்பாஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. மேலும், 600 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பஸ்பாஸ் விண்ணப்பங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment