Thursday 27 June 2013

ராணுவ பணிக்கு ஆள் தேர்வு

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டில்லி, குர்கான், பரிதாபாத், மீரட், அரியானா, மகாராஷ்டிரா, குஜராத், தாதர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள் மற்றும் தற்போது ராணுவத்தில் பணியாற்றுவோரின் குடும்பத்தினர் பணிக்கு சேரும் வகையில், ஆட்கள் தேர்வு நடத்த ராணுவ தலைமையகம் முடிவு செய்துள்ளது.

* "இன்பான்ட்ரிராணுவ வீரர்(பொது பணி): கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்களுடன் தேர்ச்சி. ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 17 வயது ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள் முதல் 21 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் அவசியம்.

* "சோல்ஜர் டிரேட்ஸ்மென் (மியூசீசியன்) பணி: கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி மட்டும் போதுமானது. வயதுவரம்பு: 17 வயது ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள் முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள்.

* தேர்வில் பங்கேற்பவர்கள் "அசல்ஆவணங்கள் கொண்டு வருதல் அவசியம்.

நாள்: ஜூலை 5, 2013
நேரம்: காலை 7 மணி
இடம்: வெலிங்டன் எம்.ஆர்.சி. வளாகம், நீலகிரி மாவட்டம்.

மேலும் விபரங்களுக்கு, 0423-228 2602 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

No comments:

Post a Comment