Saturday 31 August 2013

மாநகராட்சி அம்மா திட்டம் - சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள வார்டுகளில் “மாநகராட்சி அம்மா திட்டம்” சிறப்பு முகாம் நடைபெற உள்ளது . இம்முகாமில் கீழ்க்கண்டப் பணிகளுக்கு மனுக்கள் பெற்றவுடன் ஆணைகள் வழங்கப்பட உள்ளது .


1. பெயர், கதவு எண், தெருவின் பெயர் மற்றும் கேட்பு முதலிய திருத்தங்கள் மேற்கொள்ளுதல். 
2. புதிய சொத்துவரி கேட்பு அட்டை மற்றும் குடிநீர் கேட்பு அட்டை வழங்கல். 
3. விடுபட்ட சொத்துவரி, குடிநீர் இணைப்பு பதிவு செய்தல் தொடர்பான இதர பணிகள்,
4. தொழில் வரி இனங்கள். 
5. புதிய இனங்கள் பதிவு செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான இதர பணிகள். 
எனவே, பொது மக்கள் சொத்து வரி , குடிநீர் கட்டணம் கேட்பு அட்டைகள், தொழில் வரி சம்பந்தமாக தகுந்த ஆவணங்களுடன் உரிய விண்ணப்பம் அளித்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . 
முகாம் நடைபெறும் நாள் , இடம் , மற்றும் வார்டு
மேற்கு மண்டலம்
24.08.2013 முதல் 26.08.2013 வரை – வீரகேரளம் வார்டு அலுவலகம் ( வார்டு 18, 19)

வடக்கு மண்டலம்
24.08.2013 முதல் 26.08.2013 வரை – வெள்ளக்கிணறு வார்டு அலுவலகம் ( வார்டு 26, 43)
31.08.2013 முதல் 02.09.2013 வரை - சரவணம்பட்டி வார்டு அலுவலகம் ( வார்டு 28, 29,30,31)

தெற்கு மண்டலம்
24.08.2013 முதல் 31.08.2013 வரை – தெற்கு மண்டல அலுவலகம் ( வார்டு 87 -93)
07.09.2013 முதல் 14.09.2013 வரை - குறிச்சி வார்டு அலுவலகம் ( வார்டு 94 - 100)

கிழக்கு மண்டலம்
24.08.2013 முதல் 26.08.2013 வரை – காளப்பட்டி வார்டு அலுவலகம் ( வார்டு 33, 34, 35, 36)
ஆணையாளர் கோயம்புத்தூர் மாநகராட்சி

No comments:

Post a Comment