Friday 4 October 2013

ஜெயித்துக் காட்டுவோம்


தினமலர்

"ஜெயித்துக் காட்டுவோம்"

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, 
"தினமலர்' நாளிதழ் சார்பில், "ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி, நாளை (5ம் தேதி) மேட்டுப்பாளையத்தில் துவங்குகிறது. 

முதல் முறையாக பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்கள், அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவது எப்படி, தன்னம்பிக்கை, மனோ தைரியத்தை வளர்ப்பது எப்படி, படித்ததை நினைவில் கொள்வது எப்படி, பயமின்றி தேர்வை சந்திப்பது எப்படி என்பன போன்ற பல ஆலோசனைகளை, அனுபவம் மிக்க ஆசிரியர்கள் வழங்க உள்ளனர். 

வரும் 5ம் தேதி (சனிக்கிழமை) மேட்டுப்பாளையம் கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள இ.எம். எஸ்., திருமண மண்டபத்தில், நிகழ்ச்சி துவங்குகிறது. காலை 9.00 மணிக்கு பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், மதியம் 12.30 மணிக்கு கலைப்பிரிவு மாணவர்களுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

வரும் 6ம் தேதி (ஞாயிறு) காலை 9.00 மணிக்கு பத்தாம் வகுப்பு தமிழ் மீடியம் படிக்கும் மாணவர்களுக்கும், மதியம் 12.30 மணிக்கு ஆங்கில மீடியம் படிக்கும் மாணவர்களுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 
மாணவ, மாணவியர், மண்டப நுழைவுவாயிலில் வழங்கும் படிவத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். அதனால், நிகழ்ச்சி துவங்கும் முன்பாகவே வர வேண்டும்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு எழுதிய புத்தகம், கேள்விகள் மற்றும் புளூ பிரிண்ட், உடல் நலத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment