Thursday 24 October 2013

மெட்ரோ மேன் ஸ்ரீதரன் நாளை கோவை வருகிறார்


இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்களில் ‘மெட்ரோ ரயில்’ திட்டம் நடைமுறைப்படுத்துவதற்குத் தகுதியான நகரங்களாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தேர்வு செய்த 19 நகரங்களில், இதற்கான தகுதியைப் பெற்ற ஒரே நகரம் கோவை மட்டுமே.


கோவைக்கு மெட்ரோ ரயில் வருமா, வராதா? இல்லை கோவைக்கு எந்த திட்டம் சிறப்பாக இருக்குமென்பதை ஆய்வு செய்து பதில் அளிப்பதற்காக ‘மெட்ரோ மேன்’ என்றழைக்கப்படும் ஸ்ரீதரன் நாளை கோவை வருகிறார். நாளை மறுநாள், கோவை தொழில் வர்த்தகசபை அரங்கில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவுள்ளார்.

No comments:

Post a Comment