பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறிய, முதல்கட்ட தேர்வு வரும் 8ம் தேதி நடக்க உள்ளது.
ஆரம்ப நிலையில் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறிந்து அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கும் பட்சத்தில், சக மாணவர்கள் போன்று செயல்பட இயலும். சில எழுத்துக்களை பார்க்கும் போது ஏற்படும் குழப்பம், வடிவங்கள், நினைவு கூறுவதில் பிரச்னை, அடித்தல் திருத்தல் அதிகரித்தல், வலது இடது என்பதில் குழப்பம், வாய்மொழி கணக்கு புரியாமை என கற்றல் குறைபாடுகளை பல வழிகளில் ஆராய்ந்து தெரிந்து கொள்ள இயலும். இதன் முதல்கட்டமாக, வரும் 8ம் தேதி கோவை மாவட்டத்தில், 10 ஒன்றியங்களில், தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன் முடிவை பரிசீலித்து, தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் நடத்தப்படும்.
No comments:
Post a Comment