Thursday 3 October 2013

மாணவர்களுக்கு சிறுகதைப் போட்டி

கனவு இயக்கம்

மாணவர்களுக்கு சிறுகதைப் போட்டி

திருப்பூர் கனவு காலாண்டிதழ் சார்பாக, பள்ளி மாணவ, மாணவியருக்கான சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளிடம் கதை சொல்லும் பழக்கத்தை உருவாக்கும் முயற்சியோடு, பள்ளி மாணவ, மாணவியருக்கான சிறப்பு சிறுகதைப்போட்டி, ஒவ்வொரு ஆண்டும் கனவு இயக்கம் மூலம் நடத்தப்படுகிறது.


இப்போட்டிக்கு கதைகள் எளிய நடையில், 3 முதல் 5 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். சுயமான படைப்புகளாக இருப்பது அவசியம். சிறந்த கதைகளாக தேர்வு பெறும் 10 சிறந்த படைப்புகளுக்கு, ரூ.5,000 பரிசு பகிர்ந்து அளிக்கப்படும். கதைகளை அனுப்பும்போது, தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின், முழு விவரத்தோடு அனுப்ப வேண்டும். பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து விதமான, பள்ளி மாணவ, மாணவியருக்கும், முன்னுரிமை அளிக்கப்படும். அக்டோபர் 30ஆம் தேதிக்குள் கதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: சுப்ரபாரதி மணியன், கனவு, 8/2835, பாண்டியன் நகர், திருப்பூர்-02.

No comments:

Post a Comment