Friday 20 September 2013

தமிழ்த்தாய் விருதுக்கு அழைப்பு

தமிழ் வளர்ச்சித்துறை

தமிழ்த்தாய் விருதுக்கு அழைப்பு

தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும், திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., கபிலர், உ.வே.ச., உமறுப்
புலவர், ஜி.யு.போப் பெயரில் தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

 
இவ்விருதுக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் சிறந்த தமிழ் அமைப்பு ஒன்றை தேர்வு செய்து தமிழ்த்தாய் விருதையும் வழங்குகிறது. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள், தமிழர் பண்பாடு, நாகரிகம், கலை இலக்கியம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் செயல்படும் சிறந்த தமிழ் அமைப்புக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 



இதற்கு ஐந்து லட்ச ரூபாயும் அதற்கேற்ற தகுதியுரையும் வழங்கப்படுகிறது. விருதுக்கு தகுதியுடையவர்கள், சுயவிபரக்
குறிப்பை , உதவி இயக்குனர், தமிழ்வளர்ச்சித் துறை, கலெக்டர் அலுவலக வளாகம், கோவை- 18 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

No comments:

Post a Comment