Friday 27 September 2013

ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ஆள் தேர்வு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணி மேற்கொள்ள, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 

இத்தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாக, முழு முகவரியுடன் மொபைல் எண்களுடன், திட்ட அலுவலர், மகளிர் திட்டம், மாவட்ட கலெக்டர்அலுவலகம் என்ற முகவரிக்கு செப்., 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.



No comments:

Post a Comment