Monday 1 April 2013

விவேகானந்தர் ரத யாத்திரை!

சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கோயம்புத்தூர் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், ஏப்.,13ல் ரத யாத்திரை துவங்குகிறது.

இந்த ரதம், தமிழகம் முழுவதும் பவனி வரும். சுவாமியின் வாழ்க்கை மற்றும் அறிவுரைகளை, மக்களிடையே பரப்பி, இளைஞர்களைத் தட்டி எழுப்புவதே, இந்த யாத்திரையின் லட்சியம். ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண விவேகானந்த பாவபிரசார் பரிஷத் இணைந்து, இந்த யாத்திரையை நடத்துகின்றன.

யாத்திரை, 300 நாட்கள் நடக்கும். 10,600 கி.மீ., தூரத்தை ரதம் கடக்கிறது. 2014, ஜன.,8ம் தேதி, சென்னை, மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லத்தில், ரத யாத்திரை நிறைவு பெறும்.

No comments:

Post a Comment