Thursday 21 November 2013

பாரதி பல்லாயிரம்


மகாகவி பாரதி அறநிலை & டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி

பாரதி பல்லாயிரம் - பேச்சு, கவிதை போட்டிகள்

மகாகவி பாரதி அறநிலை & டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி இணைந்து பாரதி பல்லாயிரம் என்ற தலைப்பில் பேச்சு, கவிதை போட்டிகள் நடத்துகின்றன. இதில் அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்.

போட்டியின் முதல் சுற்றில் தேர்வாகும் மாணவர்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவர்.

பேச்சுப்போட்டி முதல் சுற்றுக்கான தலைப்புகள்:

1.   பாரதி பாடிய பாரதி (பாரதி தன்னுடைய பாடல்களில் தன்னைப் பற்றிக் கூறியவை)
2.   பாரதி காட்டும் தொழில் உலகம்
3.   பாரதி பாடிய பெரியோர்

கவிதைப்போட்டி முதல் சுற்றுக்கான தலைப்புகள்:

1.   போட்டி நாளன்று காண்பிக்கப்படும் புகைப்படத்தை, பாரதி கண் கொண்டு பார்த்து எழுத வேண்டும்
2.   மரபுக் கவிதை
3.   புதுக்கவிதை

கல்லூரி சார்பாக ஒரு போட்டியில் இருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஒரே மாணவர் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்கலாம்.

நாள்: டிச.1, 2013 (முதல் சுற்று), டிச.11, 2013 (இறுதி சுற்று)
நேரம்: காலை 9 மணி
இடம்: டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி, கோவை.



No comments:

Post a Comment